search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பேத்கர் சிலை"

    • கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமம் உள்ளது.
    • குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமம் உள்ளது. இங்கு பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அம்பேத்கர் சிலை உள்ளது. அங்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அக்கும்பல் திடீரென்று அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீசியது. அந்த குண்டு அம்பேத்கர் சிலை மீது பட்டு பழைய ஊராட்சி மன்ற கட்டிட வளாகத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து, 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்க விரட்டினர்.

    ஆனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இத்தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பெருமளவில் அந்த பகுதியில் திரண்டனர். குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் தொகுதி செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் இளையராஜா, நகர செயலாளர் அம்பேத் மற்றும் நூற்றுக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் அந்த பகுதியில் மீண்டும் திரண்டனர். பெட்ரோல் குண்டு வீசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    இதனை தொடர்ந்து துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு பால் ஊற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் சிலை மற்றும் பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

    • தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    • அந்தந்த பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    ஐ .எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அம்பேத்கர் சிலையை தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி, சிதம்பரம், சேத்தியாதோப்பு ஆகிய 7 உட்கோட்டத்தில் 107 அம்பேத்கர் சிலை உள்ளது.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் அந்தந்த பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சிலை அமைப்பதற்கு வருவாய் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி இல்லை என போலீசார் உதவியுடன் சிலையை அகற்றினர்.
    • அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் கவனத்திற்கு மீண்டும் அம்பேத்கர் சிலை அமைக்கும் வரை பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் எனக் கூறியுள்ளனர்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட தோக்கவாடி கிராமத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டது.

    இந்த சிலை அமைப்பதற்கு வருவாய் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி இல்லை என போலீசார் உதவியுடன் சிலையை அகற்றினர். அதனை செங்கம் பேரூராட்சி வளாகத்தில் பாதுகாப்புடன் வைத்தனர்.

    இந்நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கேட்டும் இதுவரை அனுமதி கிடைக்காததால் அப்பகுதி மக்கள் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக பதாகை வைத்துள்ளனர்.

    அதில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் கவனத்திற்கு மீண்டும் அம்பேத்கர் சிலை அமைக்கும் வரை பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் எனக் கூறியுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார்.
    • சமத்துவம், சமூக நீதியின் அடையாளம் என்பதால் 'சமூக நீதி'க்கான சிலை என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அமராவதி:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை 125 அடி உயரம் கொண்டது. இது 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.

    இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், நீரூற்றுகள், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார்.

    இச்சிலை சமத்துவம், சமூக நீதியின் அடையாளம் என்பதால் 'சமூக நீதி'க்கான சிலை என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • அம்பேத்கர் சிலை அமைக்கும் பணிக்காக முதல்கட்டமாக ரூ.268 கோடி செலவில் பணிகள் நடைபெற்றன.
    • அம்பேத்கரின் சிலைக்கு முன்புறம், பின்புறம் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் 125 அடி உயரமுள்ள அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் சிலைக்கு முன்புறம், பின்புறம் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் இந்த மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், நீரூற்றுகள், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து ஆந்திர மாநில சமூக நலத்துறை மந்திரி மெருகு நாகார்ஜுனா கூறுகையில்:-

    அம்பேத்கர் சிலை அமைக்கும் பணிக்காக முதல்கட்டமாக ரூ.268 கோடி செலவில் பணிகள் நடைபெற்றன.

    2-வது கட்டமாக ரூ.106 கோடியில் அம்பேத்கர் சிலைக்கு வண்ணம் தீட்டுதல் அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

    இந்த சிலை வருகிற 19-ந்தேதி திறக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நமது அரசமைப்புச் சட்டத்தின் நிலைத்த மதிநுட்பத்தைப் போற்றுவோம்.
    • மக்களாட்சி மாண்புகளின் மீது நாம் கொண்டுள்ள பற்றுறுதியின் அடையாளச்சின்னம் ஆகும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    உச்சநீதிமன்ற வளாகத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை திறக்கப்படும் இந்தச் சிறப்புமிகு அரசமைப்புச் சட்ட நாளில், நமது அரசமைப்புச் சட்டத்தின் நிலைத்த மதிநுட்பத்தைப் போற்றுவோம்.

    அரசமைப்புச் சட்டத்தின் உயர்பண்புகளை நீதித்துறையில் காப்பதற்காக அயராது பாடுபடும் நீதியின் பாதுகாவலர்களுக்கு நமது நெஞ்சார்ந்த வணக்கத்தைச் செலுத்துவோம். அண்ணல் அம்பேத்கருக்குச் சிலை வடிவிலான புகழ்வணக்கம் என்பது வெறும் நினைவுகூர்தல் அல்ல, அது அவர் வகுத்தளித்த நீதி, சமத்துவம் மற்றும் மக்களாட்சி மாண்புகளின் மீது நாம் கொண்டுள்ள பற்றுறுதியின் அடையாளச்சின்னம் ஆகும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஆண்டுதோறும், நவம்பர் 26, இந்திய அரசியலமைப்பு தினம் என கொண்டாடப்படுகிறது
    • பல வழக்கறிஞர்கள் அம்பேத்கருக்கு சிலை அமைக்க வேண்டி கோரிக்கை வைத்தனர்

    இந்திய ஜனநாயகத்தை வழிநடத்தும் அரசியலமைப்பு சட்டம் அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்பட்டு 1949, நவம்பர் 26 அன்று இந்திய பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டது.

    இதையொட்டி, 2015லிருந்து ஆண்டுதோறும் நவம்பர் 26, அரசியலமைப்பு தினம் என நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இன்று நாடு முழுவதும், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய குழுவின் தலைவரான டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் உயரிய சித்தாந்தங்களும், கோட்பாடுகளும் மக்களால் நினைவுகூரப்படும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    இதன் தொடர்ச்சியாக, இன்று இந்திய நீதித்துறையின் தலைமையிடமாக விளங்கும் உச்ச நீதிமன்ற வளாகத்தில் டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் 7 அடி உயர சிலை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதியுடன், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    அம்பேத்கர், வழக்கறிஞர் உடையுடன் தனது கையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வைத்து கொண்டிருப்பதை போல் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம், பல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலை ஒன்றை நீதிமன்ற வளாகத்தில் நிறுவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்து கடிதம் சமர்ப்பித்திருந்ததை அடுத்து உடனடியாக இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின் பயனாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    • சிலைக்கு ‘சமத்துவத்தின் சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
    • இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    அம்பேத்கரின் நினைவை போற்றும் வகையில் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரில் 13 ஏக்கர் பரப்பளவில் அம்பேத்கர் சர்வதேச மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அம்பேத்கரின் முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலைக்கு 'சமத்துவத்தின் சிலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிலை 19 அடி உயரம் கொண்டது. இது மிகவும் உயரமான சிலை ஆகும். சிலை திறப்பு விழாவில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த சிலையை பிரபல சிற்பி ராம் சுதார் வடிவமைத்துள்ளார். இவர் குஜராத் நர்மதா ஆற்றங்கரையில் நிறுவப்பட்டுள்ள 'ஒற்றுமையின் சிலை' என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 1956, அக்டோபர் 14 அன்று டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் காலமானார்
    • சர்தார் படேல் சிலையை உருவாக்கிய சிற்பி இதனை வடிவமைத்துள்ளார்

    தலித்துகள் உரிமைகளுக்காக போராடியவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவருமான 'பாபா சாகிப்' டாக்டர். பீம் ராவ் அம்பேத்கர், 1891 ஏப்ரல் 14 அன்று பிறந்தார்.

    அம்பேத்கர், இந்திய சுதந்திரத்திற்கு பிறகு பிரதமர் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான முதல் அமைச்சரவையில் சட்ட மற்றும் நீதி துறை அமைச்சராக இருந்தவர். 1956, அக்டோபர் 14 அன்று டாக்டர். அம்பேத்கர் காலமானார். இந்த நாளை அவரது தொண்டர்கள் 'தம்மா சக்ரா பரிவர்தன் தினம்' என கொண்டாடுகின்றனர்.

    இந்நிலையில் அமெரிக்காவில், வரும் அக்டோபர் 14 அன்று மேரிலாண்ட் மாநிலத்தில் அக்கோகீக் (Accokeek) பகுதியில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகி வரும் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் (AIC) 'சமத்துவத்திற்கான சிலை' (Statue of Equality) என பெயரிடப்பட்ட 19 அடி உயர அம்பேத்கர் சிலை ஒன்று திறக்கப்பட இருக்கிறது. "ஒற்றுமைக்கான சிலை" (Statue of Unity) எனும் பெயரில் இந்திய மாநிலம் குஜராத்தில் இந்திய சுதந்திர போராட்ட தலைவரான சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்த புகழ் பெற்ற சிற்பி ராம் சுதார் (Ram Sutar) கைவண்ணத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு உலகெங்கிலுமிருந்து பல முக்கிய பிரதிநிதிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • செ.கு.தமிழரசன் வலியுறுத்தல்
    • புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு.தமிழரசன் கூறியதாவது:-

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்த போது வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டது. அதேபோல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த அலுவலகங்களில் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும். இந்தியாவில் அதிகமான அன்னிய செலவானி பெற்று தருகின்ற மாவட்டம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம். இதில் ராணிப்பேட்டை மாவட்டம் முன்னோடி மாவட்டம் ஆகும்.

    தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் தான் அதிகளவில் பணியாற்றி வந்தார்கள்.

    எந்திரங்கள் வந்த பிறகு பாதி பேர் வேலை இழந்துள்ளார்கள். எனவே வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கூட்டுறவு தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கொண்டு வரவேண்டும்

    தமிழ்நாடு முழுவதும் தலித் மாணவர்கள் எந்த தொழிற்கல்வியில் சேர்ந்தாலும் அதில் நிர்வாக ஒதுக்கீடாக இருந்தாலும் சரி, அரசு ஒதுக்கீடாக இருந்தாலும் அதனுடைய கல்வி கட்டணத்தை அரசாங்கம் செலுத்த வேண்டும்.

    இதுபோன்று தெலுங்கானா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கல்வி கட்டணத்தை அரசு செலுத்துகிறது. அதே போன்று தமிழகத்திலும் கல்வி கட்டணத்தை அரசு செலுத்த வேண்டும்.

    ஏற்கனவே இருந்த பாராளுமன்ற கட்டிடத்தில் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சிலை அமையுமா? மேலும் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும், கட்டிட வளாகத்தில் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என வலியுறுத்திகிறோம். மேலும் எதிர்கட்சிகள் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பது கொள்கை ரிதியாக நியாயமானது.

    இந்திய குடியரசு கட்சியும் இதனை ஆதரிக்கிறது. வருமான வரித்துறை சோதனை என்பது இந்தியா முழுவதும் மத்தியில் ஆளுகின்ற கட்சிக்கு எதிராக செயல்படுகிறவர்களுக்கு நடக்கின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநில தலைமை நிர்வாகிகள் தன்ராஜ், கவுரிசங்கர், மாவட்ட தலைவர் வக்கீல் சிவகுமார், மாவட்ட செயலாளர் தமிழ்குசேலன், மாவட்ட பொருளாளர் ராஜாராம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • சுப்பிரமணியபுரம் ஊராட்சி தலைவர் ராம்குமார் தலைமையில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • சிவகிரியில் அம்பேத்கர் படத்திற்கு காங்கிரசார் மரியாதை செலுத்தினர்.

    சிவகிரி:

    அம்பேத்கரின் 132 -வது பிறந்த நாளை முன்னிட்டு வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றியம் பா.ஜ.க. சார்பில் சுப்பிரமணியபுரம் ஊராட்சி தலைவரும், வக்கீலும், மண்டல் தலைவருமான ராம்குமார் தலைமையில் வாசுதேவ நல்லூரில் உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமராஜா, பொது செயலாளர்கள் மகாலிங்கம், தினேஷ், பொருளாளர் கங்காதரன், ராமச்சந்திரன், முருகன், சாமி, பால்ராஜ், ரவி, முத்தமிழ்செல்வம், சங்கர், பண்டாரம், செல்வ கணேசன், இசக்கி, சர வணன், தங்க ராஜ், கவியரசு, வாஜ்பாய் முரு கன், மாரி யப்பன், செல்வம், குரு சாமி, கணே சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ்

    இதேபோல் தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. அணி மற்றும் சிவகிரி நகர காங் கிரஸ் சார்பில் சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகிரியில் அவரது சிலைக்கு முன்பாக அலங்க ரித்து வைக்க ப்பட்டி ருந்த படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. அணி தலைவர் திருஞானம், மாவட்ட காங்கிரஸ் துணை த்தலைவர் கணேசன், நகர தலைவர் வக்கீல் சண்முக சுந்தரம், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி, நகர ஓ.பி.சி. தலைவர் மாரியப்பன், காங்கிரஸ் இலக்கிய பிரிவு தலைவர் அசோக், நிர்வாகிகள் நாட்டாண்மை மாணி க்கம், சந்திரன், பிச்சை மற்றும் நிர்வா கிகள் கலந்து கொண்ட னர். முடிவில் நகர செயலாளர் வெள்ளைச் சாமி நன்றி கூறினார்.

    • ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • இப்பகுதி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.

    ஐதராபாத் ஹூசைன் சாகர் பகுதியில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.

    ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கு எஸ்சி நலத்துறை நிதி வழங்கிய நிலையில், கட்டுமானப் பொறுப்பு சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    ஹைதராபாத்தில் உள்ள இந்த 125 அடி உயர அம்பேத்கர் சிலையை முதல்வர் கே சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், தெலுங்கானா அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    ×